‘ரொம்ப சாரி’…சந்தோஷ் நாராயணனிடம் மன்னிப்பு கேட்ட அஜித்!

அஜித்குமார் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ajithkumar Santhosh Narayanan

சென்னை : நடிகர் அஜித்குமார் பொதுவாகவே அனைவரிடமும் அன்பாகப் பேசக்கூடியவர். தன்னை சந்திக்க வரும் பிரபலங்களிடமும்,ரசிகர்களிடமும் மிகவும் மரியாதையாக நடந்துகொள்வதைப் பார்த்து இருப்போம். அப்படி தான், ஒருமுறை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனைத் தெரியாமலே அவரிடம் 5 நிமிடம் பேசினாராம். இந்த தகவலை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் பெரிய இசையமைப்பாளராக வளர்வதற்கு முன்பு ஒருமுறை விமான நிலையத்தில் வைத்து அஜித்தை சந்தித்தாராம். இந்த சந்திப்பின் போது, சந்தோஷ் நாராயணன் மனைவியும் உடன் இருந்தாராம். விமான நிலையத்தில் சந்தோஷ் நாராயணன் கையை பிடித்துக்கொண்டு அஜித் நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கீங்க? என்று விசாரித்தாராம்.

அதற்கு சந்தோஷ் நாராயணன் நான் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டு இருக்கிறேன் என தன்னுடைய பெயரை சொல்லாமல் அஜித்திடம் பேசினாராம். அதற்கு அஜித் ” அருமை நல்ல மியூசிக் பண்ணுங்க கண்டிப்பாகப் பெரிய ஆளா வருவீர்கள்” என அறிவுரை செய்தாராம். பின் அஜித் தனது கணவரிடம் பேசுவதை சந்தோஷ் நாராயணன் மனைவி பார்த்து ஓடி வந்தாராம்.

ஓடி வந்து இவர் பெரிய சந்தோஷ் நாராயணன் இவர் இந்த மாதிரி படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் எனக் கூறியவுடன் அஜித் அதிர்ச்சியாகி யாரென்று தெரியாமல் பேசிவிட்டோமே என ரொம்பா சாரி என மன்னிப்பு கேட்டாராம். பிறகு தனியாக சந்தோஷ் நாராயணனையும் அழைத்துச் சென்று அவரிடமும் மன்னிப்புக்கேட்டு எனக்குச் சட்டென யார் என்று தெரியவில்லை எனக் கூறினாராம்.

முதலில் யார் என்று தெரியாமல் பேசிக்கொண்டு அதன் பிறகு யார் என்று தெரிந்த பிறகு அஜித் சந்தோஷ் நாராயணனிடம் மன்னிப்பு கேட்டுள்ளது அவருடைய நல்ல குணத்தின் வெளிப்பாடு என ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்