உருவக்கேலி குறித்து இன்ஸ்டாவில் உருக்கமாக பதிவிட்ட நடிகை திவ்ய பாரதி.!

பேச்சுலர் படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதை கவர்ந்த நடிகை திவ்யபாரதி அடுத்ததாக கதிருக்கு ஜோடியாக “ஆசை ” எனும் திரைப்படத்தில் நடித்து

பேச்சுலர் படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதை கவர்ந்த நடிகை திவ்யபாரதி அடுத்ததாக கதிருக்கு ஜோடியாக “ஆசை ” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருவகேலி குறித்து பதிவிட்டுள்ளார்.

unknown node

Divya Bharathi [Image Source: Twitter ]

இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ” சமீப நாட்களில், எனது உடல் வடிவம் போலியானது, நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் அல்லது என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என்று மக்கள் குறிப்பிடும் சில கருத்துகளைப் பார்க்கிறேன். அந்த நாட்களில், நான் “ஃபாண்டா பாட்டில் அமைப்பு” “எலும்புக்கூடு” “பெரிய பட் கேர்ள்” போன்ற பயங்கரமான கவார்த்தைகளால் என்னை அழைத்திருக்கிறார்கள்.

unknown node

Divya Bharathi [Image Source: Twitter ]

என்னுடைய கல்லூரி நாட்களில் எனது ஸ்லாம் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை இணைத்துள்ளேன், அங்கு எனது வகுப்புத் தோழி ஒருவர் எனது உடல் அமைப்பைக் கேலி செய்து வரைந்ததை நீங்கள் பார்க்கலாம்.இந்த விஷயங்கள் எல்லாம்  என் உடலை வெறுக்கும் அளவுக்கு என்னைத் தள்ளியது. இதனால், மக்கள் முன் நடக்க கூட கொஞ்சம் பயமாக இருந்தது. அது எந்த வகையிலும் என் தவறு அல்ல, என் இடுப்பு எலும்பு அமைப்பு இயற்கையாகவே இப்படி தான்.  2015-ல்  நான் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கைத் திறந்து எனது மாடலிங் பயணத்தைத் தொடங்கினேன்.

இதையும் படியுங்களேன்-துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

நான் வெளியிட்டுள்ள ” ஒவ்வொரு புதிய படத்திலும், குறிப்பாக என் உடல் வகைக்காக நான் பாராட்டுகளைப் பெற ஆரம்பித்தேன். நான் ஜிம்மிற்குள் நுழையவே இல்லை என்றாலும் அவர்களில் பலர் எனது வொர்க்அவுட்டைக் கேட்கத் தொடங்கினர்.

unknown node

Divya Bharathi [Image Source: Twitter ]

எனது உடல் அமைப்பை பலரும் ரசித்ததை அறிந்து வியந்தேன். நாம் இருக்கும் எல்லாவற்றிற்கும் எப்போதும் வெறுப்பவர்களும் காதலர்களும் இருக்கிறார்கள் என்பதையும், நம் குறைகளை நாம் எப்படிப் மாற்றுகிறோம் என்பதை  உணர்ந்தபோது அது எனக்கு ஒரு பேரறிவின் தருணம். அன்பான சக பெண்களே, விமர்சனங்களை மனதில் கொள்ளாத வரையிலும், பாராட்டுக்களை நம் தலையில் சுமக்காத வரையிலும், நாம் எப்போதும் வலிமையாகவும் அன்பாகவும் இருப்போம். இதில் நான் உங்களுடன் இருக்கிறேன் என்று உறுதியளிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார் திவ்யபாரதி .

unknown node
உருவக்கேலி குறித்து இன்ஸ்டாவில் உருக்கமாக பதிவிட்ட நடிகை திவ்ய பாரதி.!