நடிகை  சித்ராவின் மரண வழக்கு.! முரணான பதிலளிக்கும் கணவர் .!நேரில் சென்று விசாரணை நடத்தும் துணை ஆணையர்.!

the husband has given contradictory answers to the Chitra death ,therefore the Deputy Commissioner of Ambattur is conducting an inquiry.

நடிகை  சித்ராவின் மரணம் தொடர்பாக கணவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளிப்பதாகவும் , எனவே அம்பத்தூர் துணை ஆணையர் நேரில் விசாரணை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . சித்ராவின் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனையடுத்து நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் வெளியான அறிக்கையில் சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்றும் ,கணவர் மற்றும் அவரது தாயார் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மன அழுத்தம் தான் தற்கொலைக்கு காரணம் என்று காவல்துறை தெரிவித்திருந்தது .

இந்த நிலையில் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் சித்ரா மரணம் தொடர்பாக கணவர் ஹேமந்திடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான பதில்களை அளித்துள்ளார் . இந்த நிலையில் தற்போது ஹேமந்திடம் அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.