அமைச்சர் ஜீவன் செம ஸ்மார்ட்! புகழ்ந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

aishwarya rajesh

இலங்கை நுவரெலியா மாவட்டத்தில் சமீபத்தில் தேசிய பொங்கல் விழா நடைபெற்றது. அந்த விழாவில் மக்கள் மக்கள் பலரும் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா, ஐஸ்வர்யாதத்தா உள்ளிட்ட பிரபலங்களை அமைச்சர் ஜீவன் அழைத்து இருந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா, ஐஸ்வர்யாதத்தா  ஆகியோரும் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்கள். விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அமைச்சர் ஜீவனை புகழ்ந்து பேசினார். நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் ” முதலில் என்னை இந்த விழாவிற்கு அழைக்கும்போது பொங்கல் விழா இப்படி தான் இருக்கும் என்று நினைத்தேன்.

நான் நினைத்தது போலே அப்டியே இந்த பொங்கல் கொண்டாட்டம் இருந்தது. அமைச்சர் என்று சொன்னவுடன் நான் நினைத்தேன் வயதானவராக இருப்பார் என்று ஆனால், வயது அவருக்கு மிகவும் குறைவு அவ்வளவு அழகாகா இருக்கிறார். உலகத்திலே இவ்வளவு குறைவான வயதில் ஒருவர் அமைச்சர் ஆகி இருக்கிறார் என்றால் இது தான் முதல் முறை.

பூஜா கண்ணன் நிச்சயதார்த்தம்! சாய் பல்லவி நடனம்..வைரலாகும் புகைப்படங்கள் வீடியோக்கள்!

அமைச்சராக ஜீவன் பல நல்ல விஷயங்களை செய்து கொண்டு இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். கிராமத்தில் வீடு கட்டிக்கொடுப்பது, பெண்களின் படிப்பிற்கு தேவையான உதவிகளை செய்வது என செய்து கொடுத்து வருகிறார். அவருடைய உதவி மக்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இந்த மாதிரி ஒரு இளமையான அமைச்சர் எங்களுடைய ஊரில் இல்லையே…ஜீவன் கண்டிப்பாக நீங்கள் செய்யும் உதவிகளுக்கு நான் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற உதவிகளை மேலும் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” எனவும் ஐஸ்வர்யா ராஜேஷ் அமைச்சர் ஜீவனை பாராட்டி பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்