நடிகர் யாஷ் கன்னட சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டதால் திரையுலகில் பணிபுரியும் தினசரி தொழிலாளர்கள் பலரும் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். இதனால் தொழிலாளர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு பல சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதிஉதவியை அளித்து வருகின்ற நிலையில் தற்போது யாஷ் மொத்தமாக ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் கேஜிஎப் திரைப்படம் மூலம் புகழ்பெற்ற யாஷ் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்து வரும் கன்னட சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார். இந்தத் தொகை சுமார் 3 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு தலா ரூ.5000 வீதம் பிரித்து அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படவுள்ளது.