6 மாதங்களுக்கு பின் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் ரியோ ராஜ்.!

நடிகர் ரியோ ராஜ் தனது குழந்தையின் புகைப்படத்தை ஆறு மாதங்களுக்கு பின் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரியோ ராஜ் தனது குழந்தையின் புகைப்படத்தை ஆறு மாதங்களுக்கு பின் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரியோ ராஜ், கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமான இவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது இவர் பிளான் பண்ணி பண்ணணும் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்படவுள்ளது.

இவர் கடந்த 2017ல் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண்குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது தனது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து தனது குழந்தை பிறந்து 6 மாதம் ஆகியதாகவும், எங்கள் மகளின் பெயர் ‘ரிது’ என்றும் அறிவித்துள்ளார் . தற்போது ரசிகர்கள் பலர் இந்த தம்பதியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

unknown node
6 மாதங்களுக்கு பின் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் ரியோ ராஜ்.!