தியேட்டரில் படம் பார்க்கும் சந்தோஷம் ஓடிடியில் கிடைக்காது- நடிகர் ஜீவா..!

Actor Jeeva says that cinema is becoming old-fashioned and it is a great pleasure to have 100 per cent audience in theaters.

பழையநிலைக்கு சினிமா மாறிவருகிறது திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து இருப்பது மிகவும் சந்தோஷம் என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்.

நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ளபுதிய திரைப்படம் களத்தில் சந்திப்போம். இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை மஜிமா மோகனும் அருள் நீதிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கரும் நடித்துள்ளார்.

நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தை பற்றி நடிகர் ஜீவா சில விஷியங்களை கூறியுள்ளார்.

அது என்னவென்றால், களத்தில் சந்திப்போம் திரைப்படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். இந்த படத்தை பார்க்க வந்த அனைவர்க்கும் நன்றி. இந்த காலகட்டத்தில் ஒரு நபரை திரையரங்குகளில் வரவழைப்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது. இயக்குனர் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் பணியை வெளிச்சம்போட்டு காட்டும் இடமாக திரையரங்குகளில் உள்ளது.

எந்த ஒரு படமும் திரையரங்குகளில் வெளியீட வேண்டும் பெரிய திரையில் பார்க்கும் போதுதான் அதன் பிரம்மாண்டத்தை உணரமுடியும் ஓடிடியில் வெளியானால் அந்த சந்தோஷத்தை கிடைக்காது. ஊரடங்குக்கு பிறகு பல நடிகர்கள் பிசியாக உள்ளனர். நடிகர்களுக்கு தேதி கிடைப்பதில்லை பழையநிலைக்கு சினிமா மாறிவருகிறது திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து இருப்பது மிகவும் சந்தோஷம் என்றும் கூறியுள்ளார்.

தியேட்டரில் படம் பார்க்கும் சந்தோஷம் ஓடிடியில் கிடைக்காது- நடிகர் ஜீவா..!