குடும்பத்தோடு பௌத்த மதத்திற்கு மாறிய நடிகர் தீனா.!

Default Image

நடிகர் சாய் தீனா தனது குடும்பத்தினருடன் புத்த மதத்தை தழுவியுள்ளார். பிக்கு மௌரியா அவர்கள் முன்னிலையில் 22 உறுதிமொழிகள் ஏற்று குடும்பத்துடன் புத்த மதம் மாறியுள்ளார்.

தமிழில் விருமாண்டி, எந்திரன், தெறி,வடசென்னை, உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் தீனா. இவர் வில்லன் என்பவர் படத்தில் மட்டும் தான், நிஜத்தில் இல்லை என்பதற்கு ஏற்றவாறு தீனா பல உதவிகள் செய்துள்ளார்.

குறிப்பாக கொரோனா  காலகட்டத்தில், வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடம் கஷ்டப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார். அதைபோல், தன்னுடைய மனதில் தோன்றும் கருத்துக்களையும் வெளிப்படையாக இவர் தெரிவித்துவிடுவார். இதனால் பல ரசிகர்களுக்கு இவரை நடிகராக தாண்டி ஒரு நல்ல மனிதராக பிடிக்கும்.

இந்த நிலையில், தீனா தனது குடும்பத்தினருடன் இன்று பௌத்தம் மதத்திற்கு மாறியுள்ளார். பௌத்த துறவி மௌரியா முன்னிலையில், அம்மதத்தை  தழுவுவதற்காக 22 உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டு குடும்பத்துடன்  பௌத்தம் மதத்திற்கு மாறியுள்ளார். அதற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்