ஸ்வப்னா 1000 நாட்களில், 1000 பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடி பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
உலக அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சினிமா திரையுலகை பொறுத்தவரையில், ஆண்களுக்கு ஈடாக பெண்களும் பணியாற்றி வருகின்றனர். சினிமா துறையில் மட்டுமல்லாது மற்ற அணைத்து துறைகளிலுமே, பெண்கள் கால்பதித்து, பல சாதனைகள் புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், துபாயில் வாழ்ந்து வரும் இந்திய பெண் ஸ்வப்னா ஆப்ரஹாம் என்ற பெண் தற்போது ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். ஸ்வப்னா 1000 நாட்களில், 1000 பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடி பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
unknown nodeஇவர் கடந்த 2017, ஏப்-8-ம் தேதி தனது முதல் பாடலை பதிவு செய்தார். இதனையடுத்து, தனது 1000-வது பாடலை 2020 ஜன-2ம் தேதி அன்று நிறைவு செய்தார். இதனையடுத்து இவருக்கு உலக அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஸ்வப்னாவுக்கு வயது 48 என்பது குறிப்பிடத்தக்கது.