தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.! மஹிந்திரா நிறுவன பங்குகள் 2.50% உயர்வு.!

sensex

இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. சென்ற வாரத்தில் இரண்டு நாட்கள் ஏற்றமடைந்திருந்தாலும், மற்ற அனைத்து நாட்களிலும் இறக்கத்தில் வர்த்தகமானது. இதனால் பல நிறுவனங்களின் பங்குகள் சரிவை நோக்கி சென்றது.

முந்தைய நாட்களை போலவே இன்றைய நாளின் வர்த்தகத்திலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 65,101.95 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 65.30 புள்ளிகள் குறைந்து, 64,910.67 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 6.30 புள்ளிகள் குறைந்து 19,437.20 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

முந்தைய வர்த்தகநாளில் சென்செக்ஸ் 64,975.61 புள்ளிகளாவும், நிஃப்டி 19,443.50 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.15 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 79.69 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 31.00 அல்லது 0.49% உயர்ந்து ரூ.6,305 ஆக விற்பனையாகி வருகிறது.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 16 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது. அதன்படி, மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (+2.50%), டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (+1.32%), இண்டஸ் இண்ட் வங்கி (+0.92%), மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (+0.81%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (+0.82%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.

டெக் மஹிந்திரா லிமிடெட் (-0.98%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (-0.65%), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் (-0.62%), சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் (-0.56%)
உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்