ஐந்தாவது நாளாக சரிந்த சென்செக்ஸ்.! 2.15% வீழ்ச்சியில் மஹிந்திரா நிறுவன பங்குகள்.!

SensexFalls

கடந்த சில வாரங்களாக சரிவில் வர்த்தகமாகி வரும் இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, வாரத்தின் ஐந்தாவது நாளான இன்றும் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, சென்செக்ஸ் 176.76 புள்ளிகள் சரிந்து 64,655.44 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது. நிஃப்டி 45.85 புள்ளிகள் குறைந்து 19,352.10 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது.

இன்று காலை 64,756.11 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 198.72 புள்ளிகள் குறைந்து, 64,633.48 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 15.90 புள்ளிகள் குறைந்து 19,379.40 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

முந்தைய வர்த்தகநாளில் சென்செக்ஸ் 64,832.20 புள்ளிகளாவும், நிஃப்டி 19,395.30 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.40 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 80.41 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 27.00 அல்லது 0.42% குறைந்து ரூ.6,345 ஆக விற்பனையாகி வருகிறது.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 11 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது. அதன்படி, என்டிபிசி லிமிடெட் (+0.90%), டெக் மஹிந்திரா லிமிடெட் (+0.71%), பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் (+0.56%), ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் (+0.23%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க வகையில், நேற்று மஹிந்திரா நிறுவன பங்குகள் 4.43% ஆக இருந்தது. ஆனால் இன்றைய வர்த்தக நாளில் மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் பங்குகள் 2.15% சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (-2.15%), டைட்டன் கம்பெனி லிமிடெட் (-0.90%), ஏசியன் பெயிண்ட்ஸ் லிமிடெட் (-0.91%), இன்ஃபோசிஸ் லிமிடெட் (-0.60%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்