இந்தியாவில் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது.
இதில் புனேவில் நடந்த லீக் போட்டியில் 35வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
‘வெற்றியோ தோல்வியோ ஒரு தனிநபரை தோனி கைகாட்டுவதில்லை. அதனால் தான் இந்திய ரசிகர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடுகின்றனர், என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரவிந்திர ஜடேஜா கூறியுள்ளார்.
இந்நிலையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை வீரர் ரவீந்திர ஜடேஜா, இரண்டு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இருந்தாலும், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், ரவிந்திர ஜடேஜாவுக்கு தோனி மீண்டும் வாய்ப்பு அளித்தார்.இதுதான் தோனி குறித்த ரவிந்திர ஜடேஜாவின் இந்த கருத்துக்கு காரணமாம்.