தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்,கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அங்குள்ள மக்கள் மாற்றம் வரவேண்டும் என்று நினைப்பதால் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றார்.
காவிரி வழக்கில் மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாது என்றும் தமிழிசை தெரிவித்தார்