சாகசம் செய்ய பாராசூட்டில் பரந்த தம்பதியினர்..! நடுவானில் அறுந்த கயிறு…! வீடியோ உள்ளே..!

Default Image

அஜித் மற்றும் சரளா தம்பதியினர் சாகசம் செய்வதற்காக பாராசூட்டில் பறந்த போது, கயிறு அறுந்து கடலில் விழுந்தனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை டையூ தீவிலுள்ளnagoa பகுதியில், அஜித் மற்றும் சரளா தம்பதியினர் சாகசம் செய்வதற்காக பாராசூட்டில் பறந்து உள்ளனர். இவர்கள் நடுவானில் பறந்த போது பலத்த காற்று வீசியதால் கயிறு அறுந்துள்ளது. இதனையடுத்து தம்பதியர் இருவரும் கடலில் விழுந்துள்ளனர்.

இருவரும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து இருந்த காரணத்தால் கடலில் விழுந்த தம்பதியினருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக உயிர் காக்கும் மீட்பு படையினர் துரிதமாக வந்து அவர்களை மீட்டு எடுத்தனர். இதனை அஜித்தின் சகோதரர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today live 05 03 2025
blue ghost mission 1
Singer Kalpana
South Africa vs New Zealand
Rajinikanth watched Dragon
Southern Railway
Sivaji Ganesan's house