இந்திய சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர் ராஜகுருவின் பிறந்த தினம் இன்று!

Today is the birthday of Rajguru, the revolutionary freedom fighter of India.

இந்திய சுதந்திர போராட்ட புரட்சி வீரர் ராஜகுரு அவர்களின் பிறந்ததினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.

1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தில் கேடா எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் சிவராம் ராஜகுரு. இவர் பகத்சிங் மற்றும் சுகதேவ் ஆகியோருடன் இணைந்து பிரித்தானிய இந்திய அரசை எதிர்த்துப் போராடிய மகாராஷ்டிராவை சேர்ந்த புரட்சி வீரர். காவல்துறை அதிகாரியை கொன்ற வழக்கில் இந்திய பிரித்தானிய நீதிமன்றம் பகத்சிங் ,ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை தீர்ப்பு விதித்தது.

இந்நிலையில் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்பின்படி, 1931 ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி மூவருக்கும் ஒரே நாளில் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியான  உசைனி வாலா கிராமத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின் இவர்களின் உடல்கள் பஞ்சாப் பெரோசாபூர் மாவட்டம், சட்லஜ் எனும் பகுதியில் எரியூட்டப்பட்டுள்ளது.