திடீரென வெடித்த ஃபிரிட்ஜ்..? விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர்..!
நீண்ட நாட்களாக ஃபிரிட்ஜ் உபயோகப்படுத்தாததால் வெடித்துள்ளது என செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்.
செங்கல்பட்டு, ஊரப்பாக்கத்தில், கோதண்டராமன் நகரில் ஒரு வீட்டில், ஃப்ரிட்ஜில் உள்ள ரெஃப்ரிஜிரேட்டர் கம்ப்ரஸர் வெடித்து கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த வீட்டில் இருந்த மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கமளித்த செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத், மின்கசிவு காரணமாக ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ஃபிரிட்ஜ் உபயோகப்படுத்தாததால் வெடித்துள்ளது. நீண்ட நாள் பயன்படுத்தாத எலக்ட்ரானிக் பொருட்களை பரிசோதித்து பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.