நீரஜ் ஒரு ஒலிம்பிக் சாம்பியனாக இருக்கலாம்;ஆனால் நான் இன்னும் பயப்படுகிறேன்? – தேஜஸ்வின்..!

Neeraj chopra may be an Olympic champion; but am I still scared? - Tejaswin ..!

நீரஜ் சோப்ரா ஒரு ஒலிம்பிக் சாம்பியனாக இருக்கலாம் ஆனால் அவருடன் ஒரு அறையைப் பகிர நான் இன்னும் பயப்படுகிறேன் என்று தேஜஸ்வின் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்ததன் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றில் முன்னிலையில் இருந்த அவர், இறுதியில் தங்க பதக்கத்தை வென்றார்.இதனால், ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

unknown node

இந்நிலையில்,நீரஜ் சோப்ரா ஒரு ஒலிம்பிக் சாம்பியனாக இருக்கலாம் ஆனால் அவருடன் ஒரு அறையைப் பகிர நான் இன்னும் பயப்படுகிறேன் என்று நீரஜ்ஜின் நண்பரும் மற்றும் உயரம் தாண்டுதல் வீரருமான தேஜஸ்வின் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக தேஜஸ்வின் கூறியதாவது:

கனவு:

“நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, ​இந்திய மகளிர் ஹாக்கி அணியின் அன்பான நண்பரும் அறிவியல் ஆலோசகருமான வெய்ன் லோம்பார்டிடமிருந்து எனக்கு ஒரு வீடியோ அழைப்பு வந்தது.நான் வெய்ன் பாயின் அழைப்பை எடுத்த போது, சிரித்த முகத்துடன் கழுத்தில் பதக்கத்துடன் நீரஜ் இருந்தார். நான் இன்னும் அரை தூக்கத்தில் இருந்தேன், ஒரு கணம் அது கனவு என்று நினைத்தேன். நான் விரைவாக குளியலறைக்கு சென்று முகத்தை கழுவி விட்டு வந்தேன்.அப்போது, நீ தூங்குகிறாயா? என்று நீரஜ் என்னிடம் கேட்டார். “நிச்சயமாக, காலை ஆறு மணிக்கு பெரும்பாலான மக்கள் தூங்குவதை நீங்கள் காண்பீர்கள்” என்று நான் பதிலளித்தேன்.

unknown node

கண்ணீர்:

நான் ஒரு உணர்ச்சிவசப்பட்ட நபர் அல்ல,ஆனால் என் கண்களில் கண்ணீர் இருந்தது, அதை நான் பொடியின் சிறிய உதவியுடன் மறைக்க முயற்சித்தேன்.அவர் நலமாக உள்ளாரா என்று நான் கவலைப்பட்டேன், ஏனென்றால் நான்காவது வீசுதலுக்குப் பிறகு, அவர் ஏதோ அசௌகரியத்தில் இருப்பதாகத் தோன்றியது.இதனால்,அவர் நலமாக இருப்பதாக  சொன்னபோது நான் நிம்மதி அடைந்தேன்.

அவர் எங்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானவர். அவர் இந்தியாவின் முதல் தடகளப் பதக்கத்தை வென்றுள்ளார். நீங்கள் அவருடைய நண்பராக இருந்தால் உங்களை வேண்டாம் என்று சொல்ல முடியாத நபர்களில் அவர் ஒருவர்.

unknown node

புஷ்-அப்:

நீரஜ் தங்கத்தை வென்ற தருணத்தில்,நான் தரையில் இறங்கி 20 புஷ்-அப் செய்தேன். நான் மிகவும் உற்சாகமடைந்தேன்,எனினும், அடுத்ததாக நடைபெறவுள்ள பாரிஸ் 2024 ஒலிம்பிக்  என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

பணமும் அங்கீகாரமும் அவருக்கு முக்கியமல்ல:

2016 ஆம் ஆண்டில் அவரது ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கத்திற்குப் பிறகு, பெல்லாரியில்  நீரஜுடன் நான் நடந்து கொண்டிருந்தேன். நான் அவரிடம் அனைத்து பரிசுத் தொகையையும் என்ன செய்தீர்கள் அல்லது அவர் அரசாங்க வேலையைப் பெற்றுள்ளாரா என்று கேட்டேன். அவர் உரையாடலில் ஆர்வம் காட்டவில்லை மற்றும் கையை நீட்டி ஈட்டி எறிதல் செயலை செய்தார். நான் அவரிடம் கேட்டேன், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் ஏன் பதிலளிக்கவில்லை? ” அவர் பதிலளித்தார், “உங்களுக்குத் தெரியும், எனது பயிற்சியை சரியாக செய்தால்,நான் இன்னும் இரண்டு மீட்டர்களை எளிதாக ஈட்டியை வீச முடியும் என்று தெரிவித்தார். பணமும் அங்கீகாரமும் அவருக்கு முக்கியமல்ல என்பதை நான் அன்று உணர்ந்தேன். அவர் தன்னை மேம்படுத்திக்கொண்டே இருந்தார். அன்று முதல், அவர் நான் பார்க்கும் முக்கிய நபராக மாறினார்.

unknown node

அறையைப் பகிர்தல்:

நாங்கள் பெங்களூரில் 15 நாட்களாக ஒரு அறையைப் பகிர்ந்து கொண்டோம்.அவர் இப்போது ஒலிம்பிக் சாம்பியனாக இருக்கலாம் ஆனால் அவருடன் ஒரு அறையைப் பகிர நான் இன்னும் பயப்படுகிறேன். ஏனெனில்,நீங்கள் அவருடைய அறைக்குள் நுழைந்தால், அவருடைய ஆடைகள் படுக்கையில் உலர்த்தப்படுவதையோ அல்லது அறையின் நடுவில் அவரது சாக்ஸை உலர்த்துவதையோ காணலாம்.

ஒரு காதலி இருக்கிறாரா?:

நீரஜுடன் ஒரு அறையைப் பகிர்ந்துகொள்வது எனக்கு ஒரு பெரிய விஷயம் என்பதால் நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை.நாங்கள் வீடியோ கேம்கள் விளையாடுவோம்,குறிப்பாக நீரஜ் அப்போது மினி மிலிட்டியாவைப் பற்றி பைத்தியமாக இருந்தார், இப்போது அவர் பப்ஜியில் இருக்கிறார். அடுத்த முறை அவரைச் சந்திக்கும் போது அவரிடம் ஒரு காதலி இருக்கிறாரா என்று கேட்பேன்.

இந்த தலைமுறையில் பிறந்தது பாக்கியம்:

தகுதிச் சுற்றுக்கு முன் நாங்கள் பேசினோம், அவருடைய உடல் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி அவர் என்னிடம் கூறினார். அவர் பதக்கம் வெல்வார் என்று எனக்குத் தெரியும். நான்காவது சுற்றுக்குப் பிறகு, நான் பதட்டமான உற்சாகத்தில் நடுங்கிக் கொண்டிருந்தேன். நான் இதற்கு முன்னதாக PT உஷா அம்மா அல்லது (GS) ரந்தவா ஐ பார்க்கவில்லை. ஆனால் நீரஜ் விளையாடியதை பார்த்தேன், நான் இந்த தலைமுறையில் பிறந்தது பாக்கியம்.

unknown node

நான் நீரஜை முதன்முதலில் 2015 ஆம் ஆண்டில் ஒரு ஊக்க பரிசோதனை அறையில் சந்தித்தேன்,அப்போது அவர் யார் என்று தெரியவில்லை. அங்குதான் எங்கள் நட்பு தொடங்கியது அது சகோதரத்துவமாக மலர அதிக நேரம் எடுக்கவில்லை.விரைவில் நாங்கள் பழகினோம்.”,என்று தெரிவித்தார்.

நீரஜ் ஒரு ஒலிம்பிக் சாம்பியனாக இருக்கலாம்;ஆனால் நான் இன்னும் பயப்படுகிறேன்? – தேஜஸ்வின்..!