பாகிஸ்தானில் பரபரப்பு! குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் பலி 21 பேர் படுகாயம்!

bomb blast

பாகிஸ்தானின்  நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் இன்று பாதுகாப்பு படையினருடைய ரோந்து வாகனம் அருகில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படு காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்ய வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் போலீசார் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றார்கள்.

அவர்கள் விசாரணை செய்த முதற்கட்ட விசாரணையில் வெடிக்கப்பட்ட அந்த குண்டு படையினருடைய 2 ரோந்து வாகனத்திற்கும் நடுவே வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, இந்த வெடிகுண்டு தாக்குதல் பாதுகாப்பு படையினரை தாக்க வைக்கபட்டதா? என போலீசார் சந்தேகிக்கின்றார்கள். இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து திவீர விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்