ஜப்பானிய பேட்மிட்டன் வீரருக்கு கொரோனா.. தாய்லாந்து ஓபன் தொடரில் இருந்து விலகிய வீரர்கள்!

Japanese badminton player Kento Momota has been ruled out of the Thailand Open due to a corona infection. Inspite of this, all players left.

ஜப்பானிய பேட்மிட்டன் வீரரான கென்டோ மொமொட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தாய்லாந்து ஓபன் தொடரில் இருந்து அந்நாட்டின் வீரர்கள் அனைவரும் விலகியுள்ளார்.

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் வரும் 19 ஆம் தேதி தொடங்கி, 24 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த தொடரில் பங்கேற்க அதிரடி வீரரான ஜப்பான் நாட்டை சேர்ந்த கென்டோ மொமொட்டா, தாய்லாந்து தொடரில் பங்கேற்க சகா வீரர்களுடன் ஜப்பான் விமான நிலையம் சென்றடைந்தார்.

அப்பொழுது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஏழினும், அவருடன் வந்த மற்ற 22 வீரர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இந்தநிலையில், இந்த தொடரில் இருந்து 22 வீரர்களும் விலகவுள்ளதாக ஜப்பான் பேட்மிண்டன் சங்கம் தெரிவித்துள்ளது.