Tag: tamilnadunews

திருச்சியில் பயங்கரம் ! வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிய பெண் வெட்டிக்கொலை தடுக்க முயன்ற கணவருக்கு அருவாள் வெட்டு ..!!

திருச்சி மாவட்டம் சிறுகனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெரகம்பி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 65). விவசாயி. இவருக்கு ரமேஷ் (35), ராஜ்குமார்(28) என 2 மகன்கள் உள்ளனர். இதில் ரமேசுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு லதா என்பவருடன் திருமணமானது. ரமேஷ் அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனியாக வீடு கட்டி, மனைவியுடன் குடியிருந்தார். ராஜ்குமாருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. அவர் மனைவி மற்றும் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் […]

#Trichy 8 Min Read
Default Image

நிர்மலாதேவியுடன் தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி உதவி பேராசிரியை!

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் பேராசிரியை நிர்மலாதேவி இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு […]

#Thoothukudi 5 Min Read
Default Image

தூத்துக்குடியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி!

தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. போட்டிகள் தருவை கூடைப்பந்து மைதானம், விகாசா பள்ளி, லசால் பள்ளி, கிரசண்ட் பள்ளி மைதானங்கள் ஆகிய 4 இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடக்கிறது. போட்டி தொடக்க விழா வருகிற 26-ந்தேதி மாலை 6 மணிக்கு தருவை மைதானத்தில் நடக்கிறது. […]

#Thoothukudi 3 Min Read
Default Image

கோவில்பட்டியில் கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு!

கோவில்பட்டி புதுகிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்ற ரமேஷ் (வயது 42). தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரான இவர் முன்னாள் நகரசபை கவுன்சிலர் ஆவார். இவர் கோவில்பட்டி-கடலையூர் ரோட்டில் எலக்ட்ரிக்கல் கடையும், அதன் மாடியில் சர்வீஸ் மையமும் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் தனது கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு மேஜையில் இருந்த ரூ.3,200-ஐ திருடினர். […]

#Thoothukudi 3 Min Read
Default Image

ஸ்டெர்லைட் விவகாரம் : தூத்துக்குடி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட 15 கிராம மக்கள் பேரணி !!

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று போராட்டம் நடத்தினா். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அவா்கள் வழியுறுத்தி போராடி வருகின்றனா். இந்த பேரணியில் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று இணைந்து  சென்று மாசு கட்டுப்பட்டு மையத்தை முற்றுகையிட  போவதாக முடிவு செய்துள்ளனா். இந்த போராட்டத்தில் ஏராளமான போராட்டகாரா்கள் கருப்பு சட்டைகள் அணிந்து கொண்டு மாசு கட்டுப்பட்டு மையத்தை நோக்கி பேரணியாக சென்றனா்.

#Thoothukudi 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக மூடியது கண்துடைப்பு நாடகம் வைகோ குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 3-வது கட்டமாக நேற்று மாலையில் செய்துங்கநல்லூரில் இருந்து வாகன பிரசார பயணத்தை தொடங்கினார். அவர் திறந்தவேனில் நின்று பேசும்போது கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு எடுக்கும் முடிவால் தஞ்சை மாவட்டம் பாலைவனமாகி விடும். கர்நாடக அரசு மேலும் 2 அணைகளை கட்டினால், நமது மாநிலத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காத நிலை ஏற்படும். இதற்கு ஒரே தீர்வு, காவிரி மேலாண்மை வாரியம் […]

#Thoothukudi 6 Min Read
Default Image

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் – திருநாவுக்கரசர் பேச்சு!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், ஆறுமுகநேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலையில் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், வக்கீல்கள் மகேந்திரன், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் சற்குரு வரவேற்று பேசினார். தமிழகத்தில் 30 லட்சம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ந்து உள்ளனர். காமராஜர் பிறந்த […]

#Congress 6 Min Read
Default Image

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அ.குமரெட்டியபுரத்தில் 68–வது நாளாக மக்கள் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று  68–வது நாளாக போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோ‌ஷம் எழுப்பினர். தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகேயும் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில்வர்புரம் பகுதியில் பாளையாபுரம், சுப்பிரமணியபுரம், சில்வர்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் காற்றில் மாசு கலந்து இருப்பதால், மக்கள் சுவாசிக்க முடியாத […]

#Thoothukudi 3 Min Read
Default Image

தூத்துக்குடியில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் குலையன்கரிசல் கிராமத்தில் சுகாதாரப்பணியில் பள்ளி ,கல்லூரி மானவார்கள் ..!

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு குலையன்கரிசல் கிராமத்தில் சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். நோயினால் உடல் நலம் பாதிக்கப்படும் போது, ஒரு மனிதனின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பொது மக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த முகாமில் அரசு மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனையின்படி தூத்துக்குடி அரசு […]

#Thoothukudi 5 Min Read
Default Image

தூத்துக்குடியில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியல் ..!

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடக்கிறது. இந்த வாரத்துக்கான முகாம் இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா மேலத்தட்டப்பாறையிலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளத்திலும், திருச்செந்தூர் தாலுகா தென்திருப்பேரையிலும், சாத்தான்குளம் தாலுகா பிடானேரியிலும், கோவில்பட்டி தாலுகா இடைசெவல் பகுதி–2 கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகா புதூர் குளக்கட்டாக்குறிச்சியிலும், எட்டயபுரம் தாலுகா ஆத்திக்கிணறு மற்றும் தி.சண்முகபுரம் […]

#Thoothukudi 4 Min Read
Default Image

தூத்துக்குடியில் பாட்டில் குடிநீரின் தரத்தை இணையதளம் மூலம் அறிய ஏற்பாடு கலெக்டர் அதிரடி உத்தரவு ..!

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும், அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் தரத்தை பொதுமக்கள் தாங்களாகவே தெரிந்து கொள்ள உணவுப் பாதுகாப்பு துறை ஏற்பாடு செய்துள்ளது. https:/safewataerfssai.gov.in/cleanwater/home என்ற இணையதளத்தில் உள்ள தரவினை பயன்படுத்தி குடிநீர் பாட்டில், பாக்கெட், கேனில் உள்ள ஐ.எஸ்.ஐ. எண் அல்லது உணவுப் பாதுகாப்பு உரிமம் திஷிஷிகிமி எண்ணை பயன்படுத்தி அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் 6 மாதம் மற்றும் ஒரு வருட பரிசோதனை அறிக்கை, ஐ.எஸ்.ஐ. தரம், உணவுப் […]

#Thoothukudi 5 Min Read
Default Image

தூத்துக்குடியில் கணவனை அடித்துக் கொலை செய்த மனைவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!!

தூத்துக்குடி 3–வது மைல் பகுதியை சேர்ந்தவர் சேகர் என்ற குணசேகர்(வயது 47). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி லதா என்ற சகாயலதா(43). குணசேகரனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்து வந்தார். கடந்த 22–2–14 அன்று வீட்டில் வைத்து இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதனை குணசேகரன் எடுத்து சென்றதாக கருதி, சகாயலதா மற்றும் அவருடைய 17 வயது மகன் ஆகியோர் அவரை சத்தம் […]

#Thoothukudi 4 Min Read
Default Image

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு தனியார் விமான சேவை!

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு தனியார் விமான சேவை ஜூன் மாதம் முதல் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழில் நகரமாக வளர்ச்சி பெற்று உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தூத்துக்குடிக்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அதே நேரத்தில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ஏர்பஸ் உள்ளிட்ட பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிலம் மாவட்ட […]

#Thoothukudi 4 Min Read
Default Image

“அதிர்ஷ்டம் கதவை தட்டும்போது தவறவிட வேண்டாம்” நிர்மலா தேவியின் வாட்ஸ் அப் உரையாடல்..!

அருப்புக்கோட்டையில் உள்ள  தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதன் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ. டி.எஸ்.பி. ராஜேஸ்வரி, உதவி விசாரணை அதிகாரியாக மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் […]

news 11 Min Read
Default Image

தூத்துக்குடியில் வாகண விபத்தில் சிக்கி ஐடிஐ கல்லூரி மாணவன் பலி ..!

ஓட்டப்பிடாரம் அருகே திங்கள்கிழமை மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஐடிஐ மாணவர் உயிரிழந்தார். ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மேலமீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமர் மகன் வேல்ராஜ் (18).  ஐடிஐ படித்து வந்தார்.  இவர்,  மேலமீனாட்சிபுரத்தில் இருந்து கவர்னர்கிரி நோக்கி திங்கள்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் வேல்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இந்த விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#Accident 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் சங்கு குளிக்க சென்ற மீனவர் திடீர் மரணம் ..!

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த செய்யது உமர் காத்தான் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் சுனாமி காலனி யாசின் மகன் சம்சுகனி (37), மனோ (35) உள்பட 7 மீனவர்கள் தாளமுத்துநகர் கடற்கரையிலிருந்து சங்கு குளிக்க சென்றனர். திருச்செந்தூருக்கு தெற்கே 13 கி.மீ. கடல்மைல் தொலைவில் சங்கு குளித்து கொண்டிருந்தபோது, சம்சுகனி திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, படகை உடனடியாக ஜீவாநகர் கடற்கரைக்கு திருப்பி, சம்சுகனியை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சம்சுகனி இறந்துவிட்டதாக […]

#Sea 2 Min Read
Default Image