தன்மீதான பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று தமிழக சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து, விசாரித்திருந்தனர்.இதனையடுத்து,சிறப்பு டி.ஜி.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து,இந்த வழக்கில் புகார் சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. மீது விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை […]