டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் வன்முறையாக மாறியது.இதில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையில் போலீசாரை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டிய ஷாரூக் என்ற இளைஞரை டெல்லி போலீசார் உத்தரபிரதேசத்தில் கைது செய்தனர். இந்நிலையில் கைதான இளைஞர் ஷாரூக் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. ஷாரூக் வீட்டில் இருந்து அவர் பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி, தோட்டாக்களை டெல்லி போலீஸ் கைப்பற்றினர்.
டெல்லி வன்முறையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் வன்முறையாக மாறியது.இதில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ப்ரவரி மாதம் 24-ஆம் தேதி நடைபெற்ற வன்முறையில் போலீசாரை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டிய ஷாரூக் என்ற இளைஞரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் உத்தரபிரதேசத்தில் கைது செய்தனர்.