#Breaking-காவலர் முத்துராஜை சிறையில் அடைக்க உத்தரவு!!

கைது செய்யப்பட்ட காவலர்  முத்துராஜ் மருத்துவ பரிசோதனை செய்ய தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கி உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த விசாரணையின் அடிப்படையில் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. மேலும்  … Read more

சாத்தான்குளம் விவகாரம்.! ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை கலைக்க வேண்டும் – மனிதநேய ஜனநாயக கட்சி.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரான மு. தமிமுன் அன்சாரி , ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை கலைக்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த கொடூரமான சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கும் பங்கு … Read more

“சாத்தான்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்”- தளபதி தரப்பில் இருந்து எழுந்த குரல்.!

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு காரணமான சாத்தான்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று விஜய் அவர்களின் தந்தை வலியுறுத்தி உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த கொடூரமான சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலக்கியுள்ளது. இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து பல அரசியல் பிரமுகர்களும், ரஜினி, … Read more

சாத்தன் குளம் :அனைவரும் கைது செய்யப்பட்டனர்- ஐஜி தகவல்

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் அனைவரும் கைது செய்யப்பட்டதாக ஐஜி சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிரடியாக கைது  சிபிசிஐடி போலீசார் கைது செய்தது.கங்கைகொண்டான் செல்லும் வழியில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் 5 ஆவது குற்றவாளியாகவும் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை முடிந்த நிலையில் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆய்வாளர் … Read more

“அதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணை போகக் கூடாது” – பாரதிராஜா.!

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாகவே முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதனை குறித்த விசாரணை நேற்று மதுரை ஐகோர்ட் கிளையில் … Read more

#Breaking#பிரேதப்பரிசோதனை அறிக்கை தாக்கல்!

சாத்தான்குளம் தந்தை – மகன் பிரேதப்பரிசோதனை அறிக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன்  மரணம் குறித்து தாமாக முன்வந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை  இம்மரணம் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.இன்று உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியான நிலையில்  உயிரிழந்தவர்களின் பிரேதப்பரிசோதனை அறிக்கை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தந்தை – மகன் பிரேதப்பரிசோதனை அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நெல்லை மருத்துவக் கல்லூரி … Read more

உன்னால் ஒன்னும்****முடியாதுடா! நீதிபதிக்கு மிரட்டல்-அம்பலமான தகவல்

சாத்தான் குளம் தந்தை -மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாமாக விசாரித்தது உயர்நீதிமன்ற மதுரைகிளை; கோவில்பட்டி நிதித்துறை நடுவரை காவலர்  ஒருவர் உன்னால் ஒன்றும்*** முடியாதுடா என்று தடித்த வார்த்தைகளில்  வசைப்பாடிய அநாகரீக செயலானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன்  மரணம் குறித்து தாமாக முன்வந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை  இம்மரணம் தொடர்பான விசாரணையை கடந்த திங்கள்கிழமையில்  நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக  மதுரைகிளை நீதிமன்ற பதிவாளருக்கு கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் இருந்து இமெயிலில் இருந்து … Read more

ஒருமையில் நீதிபதிக்கே மிரட்டல்!என்ன நடக்குது? ஆள்வது யார்?

நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்களே!  என்ன நடக்கிறது? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சாத்தன் குளத்தில் வியாபரிகளான தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய காவல் ஆய்வாளரும் அங்கு நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் நீதித்துறை நடுவரை தரக்குறைவாக பேசிதாக  சாத்தான்குளம் காவலர் மகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும்  தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், சாத்தான்குளம் டி.எஸ்.பி பிரதாபன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் … Read more

மருந்துக்கடைகளை மூடுங்கள்-வணிகர் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று 4 மணி நேரம் மருந்து கடைகள் மூடப்படும் என்று மருத்துவ வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்  நடைபெறுவதாக வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது.அதன்படி தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை அனைத்து மருந்து கடைகள் மூடப்படும் என்று  மருத்துவ வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வணிகர் சங்க … Read more