லக்கிம்பூர் கெரி வன்முறை விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் அவர்களை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதன்பின் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் கார் ஓட்டுநர், 2 பாஜக தொண்டர்கள், ஒரு பத்திரிக்கையாளர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச […]