புல்வாமாவில் தீவிரவாதிகள்-பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தனர். அதுமட்டுமின்றி, 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாண்ட்ஸூ கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவர்கள் இருக்கும் பகுதியை நோக்கி துணை ராணுவ படை வீரர்கள் சென்றனர். இதனை அறிந்த தீவிரவாதிகள், அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். […]