BREAKING :விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் ..!

ஆந்திர மாநிலம்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் என்ற விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 09 .28 மணிக்கு பிஎஸ்எல்வி- சி47 ராக்கெட் மூலம் மொத்தம் 14 செயற்கைக்கோள்கள் வைத்து விண்ணில் ஏவப்பட்டது. அதில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் 13 நானோ  வகை செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு உள்ளது.அந்த 13 செயற்கைக்கோள்களும்  அமெரிக்காவுக்கு சொந்தமானது. இதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை அதிகாரப்பூர்வமாக இஸ்ரோ அறிவித்தது. இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோள் துல்லியமான படங்களை அனுப்பும் திறன் கொண்டது. … Read more