திமுக கழகத்தின் செய்தித்தொடர்பு இணைச்செயலாளராக வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை நியமனம் செய்து அக்கட்சி அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அக்கட்சியின் தலைவர் சீமானுக்கும், ராஜீவ் காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இதனையடுத்து, கடந்த ஜனவரி 28-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் […]