சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 2 நாட்களாகமையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல் புயலாக உருவாகி இருக்கிறது. இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை புயல் கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயலின் காரணமாக நாளை சென்னை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கனமழையை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கையை எடுத்து வரும் […]