திடீர் உடல் நலக்குறைவு…மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

Mansoor Ali khan

Mansoor Ali khan: பிரச்சாரத்தின் போது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்றைய தினம் அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது, திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் … Read more

மக்களவை தேர்தல் – கமல்ஹாசன் ஆலோசனை!

2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக கமல்ஹாசன் கருத்து கேட்பு. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை அண்ணா நகரில் நடைபெறும் ஆலோசனையில் மக்கள் நீதி மய்யம் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக கமல்ஹாசன் கருத்து கேட்டு வருகிறார்.

Election Breaking : 8605 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றுவருகிறது. வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் – 2,03,151  வாக்குகள்  பெற்றுள்ளார். திமுக வேட்பாளர்  கதிர் ஆனந்த்– 1,94,546  வாக்குகள்  பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்   தீபலக்ஷ்மி–  10,184 வாக்குகள்  பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 8605 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் … Read more

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்-  ஏ.சி.சண்முகம் நம்பிக்கை

பணப்பட்டுவாடா புகார் காரணமாக  ரத்து செய்யப்பட்ட  வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் இன்று வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில்  போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேலூர் வள்ளலாரில் உள்ள வாக்குச்சாவடி … Read more

வேலூர் மக்களவை தேர்தல் : காலை 9 மணி நிலவரம் என்ன ?விவரம் இதோ …

பணப்பட்டுவாடா புகார் காரணமாக  ஒத்திவைக்கப்பட்ட  வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தற்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 7.40 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. வேலூர் – 8.79%  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அணைக்கட்டு – 6.10% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. கே.வி.குப்பம் – 8.85% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. குடியாத்தம் – 6.79%  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. வாணியம்பாடி – 6.29% … Read more

வேலூரில் தொடங்கியது வாக்குப்பதிவு !133 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை

பணப்பட்டுவாடா புகார் காரணமாக  ஒத்திவைக்கப்பட்ட  வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வேலூர் மக்களவை தேர்தலில்  திமுக சார்பாக  கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பாக  ஏ.சி.சண்முகம்,நாம தமிழர் கட்சி சார்பாக தீப லட்சுமி  உட்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், 14.32 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் .மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,32, 555 ஆகும் . இதில் ஆண்கள் வாக்காளர்களின் எண்ணிக்கை 7,01,351 , பெண்கள் வாக்காளர்களின் எண்ணிக்கை … Read more