செப்டம்பர் 15ம் தேதிக்குள் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு. தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என 2 வகையான உள்ளாட்சி அமைப்புகளும், அவற்றில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகளும் உள்ளன. தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களுக்கு 2019 டிசம்பரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 2020 ஜனவரியில் பொறுப்பேற்றனர். வார்டு வரையறை பணிகள் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. […]