மேற்குவங்கத்தில் சந்தேஷ்காலி என்ற பகுதியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறி பாஜக பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சந்தேஷ்காலி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி ஜஸ்பிரீத் சிங்கிற்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி உடன் வந்திருந்த பாஜக ஆதரவாளர்களில் யாரோ ஒருவர் காவல் அதிகாரி ஜஸ்பிரீத் சிங்கை காலிஸ்தானி என அழைத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக ஆதரவாளர்களுடன் காவல் அதிகாரி ஜஸ்பிரீத் சிங் வாக்குவாதத்தில் […]