நடிகர் சங்க வழக்கு : கார்த்தி, நாசர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோருக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2024 செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற 68-வது பொதுக்குழுக் கூட்டத்தில், கட்டிடப் பணிகளுக்குத் தேவையான நிதி காரணமாகவும், தேர்தல் நடத்துவதால் ஏற்படும் செலவுகள் மற்றும் பணிகளுக்குப் பாதிப்பு ஆகியவற்றைக் […]