Tag: Chennai weather

கொடைக்கானல் போல் மாறிய சென்னை… சாலையை மூடிய பனி.!

சென்னை : சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை ஏற்பட்டுள்ள கடும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புறநகர் ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு உள்ளதால், வாகன ஓட்டிகள் சாலைகள் தெரியாமல் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதலே சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது. தெருக்களில் எதிரில் வரும் ஆட்களே தெரியாத […]

#Chennai 4 Min Read
Chennai Snow Fall

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி : ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : வங்கக் கடலில் உருவான “ஃபெஞ்சல் புயல்” காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சேதங்கள் குறித்து,  தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது எனவும், இந்த இயற்கைப் பேரிடரின் விளைவுகளை சமாளிக்க மாநிலத்திற்கு அவசர நிதி உதவி தேவைப்படுவதாகவும், பாதிப்புகளின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசரத் தேவையைக் கருத்தில் […]

Bay of Bengal 5 Min Read
mk stalin cm

ஃபெஞ்சல் புயல் தாக்கம் : ரூ.2,000 கோடி கேட்ட முதல்வர்..போன் செய்த பிரதமர்!

சென்னை : தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்டுள்ள கடுமையான மற்றும் வரலாறு காணாத சேதங்களைக் கருத்தில்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். புயலின் தாக்கம் ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்த புயலின் காரணமாக, திருவண்ணாமலை, புதுச்சேரி,  கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதோடு நிலச்சரிவு ஏற்பட்டு பரிதாபமாக 7 பேர் […]

Bay of Bengal 6 Min Read
mk stalin pm modi

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: ராகுல் காந்தி வேதனை பதிவு.!

சென்னை : தமிழகம், புதுவையில் கோரத் தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல், 12 மனித உயிர்களை பலி வாங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தப் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும்பாலான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களை இடம்பெயரச் செய்துள்ளனர். புயல் பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள அவர் தற்காலிக சீரமைப்பு பணிக்காக 2,475 கோடி கோரியுள்ளார். முதற்கட்ட கணக்கெடுப்பில் 69 லட்சம் குடும்பங்கள், 2,11,139 […]

Bay of Bengal 3 Min Read
FengalCyclone RahulGandhi

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

விழுப்புரம் : ஃபெஞ்சல் புயல் காரணமாக,  புதுச்சேரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை ஏற்பட்டு வெள்ளம் வந்துள்ளது. எனவே, வெள்ளத்தில் சிக்கி வீட்டிற்கு உள்ளே இருக்கும் மக்களை மீட்கும் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், மற்றோரு பக்கம் விடுமுறை பற்றிய விவரங்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே, கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தொடர் மழை மற்றும் […]

Bay of Bengal 3 Min Read
rain tn school leave

தமிழகத்தில் நாளை இந்த 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : டிசம்பர் 1-ஆம் தேதி காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு […]

Bay of Bengal 4 Min Read
heavy rain tn update

ஆட்டத்தை காட்டிய ஃபெஞ்சல் புயல்! மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?

சென்னை : வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இன்று (2 டிசம்பர்) வட உள் தமிழகம் அதே பகுதியில் நீடித்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை  டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய அரபிக்கடலில் வடக்கு கேரளா-கர்நாடகா கடற்கரையில் உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு கடற்கரைகளுக்கு 2-ஆம், 3 -ஆம் தேதி காற்றின் வேகம் […]

#Fishermen # 5 Min Read
fisherman alert TN

புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல்! வரலாறு காணாத மழையில் ஊத்தங்கரை!

கிருஷ்ணகிரி : ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில், அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மேலும் வலுவிழந்து வட உள் தமிழ்நாட்டில் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த புயலின் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரை பகுதியில் பெய்த கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றுலும் பாதித்துள்ளது. ஏனென்றால், […]

Bay of Bengal 4 Min Read
Krishnagiri

3 பேரை பலி வாங்கிய ஃபெஞ்சல் புயல்! மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு!

சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையை கடந்து கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் – காரைக்கால் பகுதிக்கு இடையே கரையை கடந்து வரும் புயலால் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இன்று இரவுக்குள் முழுவதுமாக புயல் கரையை கடந்துவிடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் சில […]

#Death 3 Min Read
death

ஃபெஞ்சல் புயல் எதிரொலி : மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?

சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையை கடந்து கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் – காரைக்கால் பகுதிக்கு இடையே கரையை கடந்து வரும் புயலால் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இன்று இரவுக்குள் முழுவதுமாக புயல் கரையை கடந்துவிடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள  எச்சரிக்கை என்னவென்பது குறித்து பார்ப்போம். தமிழக கடலோரப்பகுதிகள் 1.12.2024: வட தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய […]

#Fishermen # 5 Min Read
TN fisherman alert

ஃபெஞ்சல் புயல் : கனமழை எங்கு பெய்யும்? சென்னை நிலை என்ன? வெதர்மேன் அப்டேட்!

சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையை கடந்து கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் – காரைக்கால் பகுதிக்கு இடையே கரையை கடந்து வரும் புயலால் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதன் காரணமாக எந்தெந்த பகுதியில் வானிலை எவ்வாறு இருக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் , “ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதன் காரணமாக பாண்டிச்சேரி பகுதியில் கனமழை […]

Bay of Bengal 3 Min Read
Tamil Nadu Weatherman

புதுச்சேரி மக்களே! ” இன்று இரவு முதல் நாளை வரை வெளியே வர வேண்டாம்”…அரசு அறிவுறுத்தல்!

புதுச்சேரி :  தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த “ஃபெஞ்சல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று 30 நவம்பர் 2024 அன்று தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்தது. கடற்கரையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில், மகாபலிபுரத்திலிருந்து 50 கி.மீ தென்-தென்கிழக்கே, புதுச்சேரியிலிருந்து 60 கி.மீ கிழக்கு-வடகிழக்கே மற்றும் சென்னைக்கு தெற்கே 90 கி.மீ நிலை கொண்டுள்ளது. ஏற்கனவே, இது கரையை கடக்க தொடங்கிய நிலையில். […]

#Puducherry 4 Min Read
puducherry govt

கரையை கடக்க தொடங்கிய ஃபெஞ்சல் புயல்! எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

சென்னை : ஃபெஞ்சல் புயல் எப்போது கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று மாலை 5.30 மணி அளவில் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருந்தது. இன்று ரெட் அலர்ட் மாவட்டங்கள்  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும் என ஏற்கனவே […]

#Rain 3 Min Read
rain TN

கரையை கடக்க துவங்கியது ஃபெஞ்சல் புயல்!

சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது இன்று மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. கரையை கடக்கும் போது சுமார் 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது புதுச்சேரிக்கு அருகே ஃபெஞ்சல் புயல், புயலாகவே கரையை கடக்க துவங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 7 கிமீ வேகத்தில் மெதுவாகவே இந்த […]

#Rain 3 Min Read
FengalCyclone alert

கோவைக்கு கனமழை எச்சரிக்கை : “மக்கள் பாதுகாப்பாக இருங்க”…மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

கோவை : கோவை மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஏற்கனவே, ஃபெஞ்சல் புயல் காரணமாக கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது இந்த சூழலில்,  அறிவுறுத்தல் கொடுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 1077 மற்றும் 0422-2306051 என்ற கட்டணமில்லா […]

#Rain 4 Min Read
coimbatore rain

சென்னை, காஞ்சிபுரம், என 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

சென்னை : தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்தி கனமழையை கொடுத்துக்கொண்டு இருக்கும் தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று ( நவம்பர் 30) வடமேற்கு திசையில் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.  காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரையை கடக்கிறது. இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களின் பல பகுதிகளில் நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை […]

Bay of Bengal 5 Min Read
senthil balaji

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட்!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் “ஃபெஞ்சல்” புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-11-2024) காலை 830 மணி அளவில் அதே பகுதிகளில் புயலாக, புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே […]

Bay of Bengal 4 Min Read
orange alert chennai

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: எந்தெநெத மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை : ஃபெஞ்சல்’ புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கை எதிரொலியாக தஞ்சாவூர் திருவிடைமருதூர், கும்பகோணம் தாலுகாக்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை மற்றும் […]

#Rain 3 Min Read
tn rain school leave

சென்னை, கடலூர் மாவட்டங்களில் நாளை பகுதிகளில் மின்தடை? விவரம் இதோ!

சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கடற்கரையில் கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருந்தது. எனவே, இந்த மாவட்டங்களில் மின்தடை ஏற்படக்கூடிய விவரம் பற்றிய தகவலையும் தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி… கோவை :  மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம் அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம், கடலூர் : தட்டாஞ்சாவடி, திருவதிகை, […]

#Chennai 9 Min Read
chennai power cut

மக்களே மழை நேரத்தில் இதை பண்ணாதீங்க! மின்சார வாரியம் அறிவுறுத்தல்!

சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அத்துடன் புயல் கரையை கடக்கும்போது   சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு ஏற்கனவே தமிழக அரசு அறிவுறுத்தலை வழங்கி […]

#TANGEDCO 6 Min Read
Chennai Rains