ஊடகத்துறையினர் அனைவரும் முன்களப் பணியாளர்களாகவே கருதப்படுவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா பரவலுக்கு எதிரான போரில் செய்தித்தாள்,காட்சி,ஒலி ஆகிய ஊடகங்களில் பணிபுரிவோர் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என்று வருகின்ற மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் இருப்பது ஊடகத்துறையே.ஏனெனில்,கடுமையான மழை மற்றும் வெயிலிலும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் […]