புல்வாமாவில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

புல்வாமா மாவட்டத்தில் இன்று  நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். புல்வாமாவின் ஹக்ரிபோரா / ககாபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலுக்கு பின்னர் அந்தப் பகுதியை  இந்திய ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சுற்றி வளைத்தனர். அப்போது, ஏற்பட்டமோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் நடந்த இரண்டாவது சண்டை இதுவாகும். தெற்கு காஷ்மீரின் சோபியன் … Read more

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரின் பாட்மாலூ பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றிய தகவல் கிடைத்ததும், அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தபோது, ​​ பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

சோபூரில் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!

இன்று சோப்பூர் நகரில்  நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் நகரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவலை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சோபூர் நகரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில்  மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். சோபூர் மாவட்டத்தின் ரெபன் பகுதியில் இந்த என்கவுன்டர் நடந்ததாக போலீசார் … Read more

ஜம்முவில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள  தின்சுகியா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக வந்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து காஷ்மீர் போலீசாரும், ராணுவத்தினரும் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது, பயங்கரவாதிகள் பதுங்கிய வீட்டைச் சுற்றி இன்று காலை அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துபபாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, அங்கு ஏராளமான படைவீரர்கள் குவிக்கப்பட்டு துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. ஆபரேஷன் வைப் அவுட் என்ற பெயரில் கடந்த ஒருவாரத்தில் சுமார் 20 தீவிரவாதிகளை … Read more