வேலூரில் அரசு பள்ளி மாணவன் மைதானத்தில் ஓடும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு எனும் ஊரில் செயல்பட்டு வரும் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணைக்கட்டு, அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மாணவர்களை பள்ளி மைதானத்தை சுற்றி ஓட சொன்னதாக தெரிகிறது. அந்த சமயம் மாணவன் மோகன்ராஜ், மைதானத்தில் சுருண்டு மயங்கி கிழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
நாமக்கல்லில் இருந்து திருச்சி சென்ற தனியார் பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், நந்தகுமார் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளார். இந்நிலையில், பேருந்து வளைவில் திரும்பியபோது அப்போது எதிர்பாராதவிதமாக மாணவர் நந்தகுமார் கீழே விழுந்தபோது, பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் உயிரிழந்தார்.
கோவை ஆலந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். கோவை ஆலாந்துறை அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் 2 பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது, அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் உட்பட 2 பேர் 3 பள்ளி மாணவர்களை கத்தியால் குத்தினர். இதில் காயம் அடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், […]