பிரபல குணச்சித்திர நடிகர் விஸ்வேஸ்வர ராவ் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.!

visweswara rao rip

RIP Visveshwara Rao: பிரபல நடிகர் விஸ்வேஸ்வர ராவ் (62) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார்.  சமீப காலமாக தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்த உயிரிழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே இரண்டு தமிழ் சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். மார்ச் 26-ல் நடிகர் சேசு, மார்ச் 29 -ல் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தனர். இன்று காலை நடிகர் விஸ்வேஸ்வர ராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 62 வயதான இவர் கடந்த சில நாட்களாக … Read more

தமிழகத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ள நடமாடும் சுடுகாடு..!

சடலத்தை எளிதாக தகனம் செய்யும் வகையில், நடமாடும் இடுகாடு தமிழகத்தில் முதல்முறையாக ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாகவே இன்று பல கிராமங்களில் சடலங்களை எரிப்பதற்கு சுடுகாட்டுக்கு செல்வதற்கு வெகு தொலைவில் இடுகாடு இருப்பதாலும், சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை காணப்படுவதையும் நாம் செய்திகள் வாயிலாக அறிந்து கொள்கிறோம். இந்த நிலையில் சடலத்தை எளிதாக தகனம் செய்யும் வகையில், நடமாடும் இடுகாடு தமிழகத்தில் முதல்முறையாக ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டு மாவட்டத்தில் நடமாடும் மயான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் … Read more

டெல்லியில் அடுத்த கொடூரம்.! சூட்கேசில் கண்டெக்கப்பட்ட பெண்ணின் உடல்.!

டெல்லியில் கழிவுநீர் வாய்க்காலில் ஒரு சூட்கேஸில் இறந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் என்ற இளைஞன் கொடூரமாக கொன்று துண்டு துண்டாக வெட்டிய கொலை சம்பவம் இந்தியாவையே அதிரவைத்தது. இதனை அடுத்தும் ஒரு சில சம்பவங்கள் இதே போல இந்தியாவில் நடந்தன. தற்போது மீண்டும் டெல்லியில், அதே போல உயிரிழந்த ஒரு பெண்ணின் உடல் சூட்கேசில் கண்டெக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் நேற்று (புதன்கிழமை) … Read more

கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் – அமைச்சர் மெய்யநாதன்

கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.  கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாணடிகுப்பத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது கபடி வீரர் விமல்ராஜ் என்பவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிர் இழந்தார். இவரது மரணம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கிய நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், இது குறித்து அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், கபடி வீரர் விமல்ராஜ் … Read more

‘வெகு சீக்கிரம் போய்விட்டார்’ – இவரது மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவின் திடீர் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். … Read more

அதிர்ச்சி :ஆஸ்திரேலிய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்..!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். சிட்னியில் இந்திய அணிக்கு எதிராக  1992-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, இதுவரை 708 விக்கெட்டுகளை  வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 15 ஆண்டுகளாக … Read more

‘உங்களையெல்லாம் பார்க்க வேண்டும்’ இறப்பதற்கு முன் மாணவர்களிடம் கூறிய ஆசிரியர்..!

கேரளாவில் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது மாணவர்களை கேமராவை ஆன் செய்யச் சொல்லி, அவர்கள் ஒவ்வொருவரையும் கடைசியாக ஒரு முறை பார்த்தார்.  கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அரசு நலன்புரி கீழ்நிலைப் பள்ளியில் 47 வயதான மாதவி என்ற 3 ஆம் வகுப்பு கணித ஆசிரியை உள்ளார். இவர் கடந்த வியாழக்கிழமை தனது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென அசௌகரியம் ஏற்பட்டடு இருமல் தொடங்கியது. … Read more

ஊழியர் மரணம்;திமுக எம்பி உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு…!

முந்திரி தொழிற்சாலை ஊழியர் மரணம் தொடர்பாக கடலூர் திமுக எம்பி டி.ஆர்.வி.ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலூர் தி.மு.க. எம்பி டி.ஆர்.வி.ரமேஷ் அவர்களுக்கு பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் சொந்தமாக ஒரு முந்திரி தொழிற்சாலை உள்ளது.அத்தொழிற்சாலையில்,மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (55) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்,கடந்த மாதம் 19 ஆம் தேதி வேலைக்கு சென்ற கோவிந்தராஜ் வீடு திரும்பவில்லை.அதன்பின்னர்,அவர் உயிரிழந்து விட்டதாகவும்,அவரது உடல் அரசு மருத்துவமனையில் … Read more

எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன் உடல்நலக்குறைவால் காலமானார்…!

எம்.எஸ்.விஸ்வநாதனின் நான்காவது மகனான ஹரிதாஸ் விசுவநாதன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், பாடகராகவும் நடிகராகவும் தனது பன்முக திறமைகளை வெளிக்காட்டியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். தனது பன்முக திறமையால் பல விருதுகளை குவித்த இவர்  கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது வயது முதிர்வு பிரச்னை காரணமாக காலமானார். இவருக்கு ஏழு பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் நான்கு மகன்கள் மற்றும் 3 மகள்கள் ஆவர். இந்நிலையில் எம்.எஸ்.விஸ்வநாதனின் நான்காவது மகனான ஹரிதாஸ் விசுவநாதன், … Read more

திமுகவின் முக்கியப்புள்ளி மாரடைப்பால் மரணம்…!

சேலத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். சேலத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். இவர், தனது பிறந்தநாளான இன்று தனது தந்தையின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்துள்ளார். பிறந்தநாளன்று உயிரிழந்த ராஜா,  திமுக தேர்தல் பணிக்குழுவின் செயலாளராக இருந்துள்ளார்.  மேலும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக முன்னாள் … Read more