நாடு முழுவதும் மேலும் 1.5 லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிதித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அதில், நாடு முழுவதும் மேலும் 1.5 லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும். டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் புதிய மையங்கள் திறக்கப்படும். வங்கிகளுடன் இணைந்து தபால்துறை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், நாடு முழுவதும் […]