சோகத்தில் ரசிகர்கள்! பிரஞ்சு ஓபன் தொடரிலிருந்து விலகினார் நோவக் ஜோகோவிச்..!

பிரஞ்சு ஓபன்: நடப்பாண்டில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரானது கடந்த ஜூன்-26 ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து

பிரஞ்சு ஓபன்:நடப்பாண்டில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரானது கடந்த ஜூன்-26 ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்ட நட்சத்திர வீரரான செர்பிய நாட்டின் டென்னிஸ் ஜமாபவனான நோவக் ஜோகோவிச் தகுதி சுற்றுகளில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறி இருந்தார்.

இந்நிலையில், முழங்கால் காயம் காரணமாக நடைபெற்று வரும் இந்த பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து இருந்து விலகி இருக்கிறார். ஜோகோவிச் சமீபத்தில் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறி அங்கு காஸ்பர் ரூட்டை எதிர்கொள்ளத் தயாராக இருந்த நிலையில் தற்போது வெளியேறியுள்ளார்.

மேலும், அவரது இன்ஸ்டா தளத்தில், ‘பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து விலகுவதாக வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்’. இது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Novak Djokovic (@djokernole)