நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் குழந்தை பிறக்கப்போவதாக விராட் கோலி ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில், திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் விராட் கோலி தற்பொழுது மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆம் விராட்கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்கப் போவதாக ட்விட்டரில் விராட் கோலி பதிவு செய்துள்ளார். மேலும் விராட் கோலி வெளியிட்ட பதிவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாங்கள் மூன்று பேராக வருகிறோம் என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்நிலையில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு அனைத்து கிரிக்கெட் வீரர்கள், மற்றும் பல பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
And then, we were three! Arriving Jan 2021 ❤️???? pic.twitter.com/0BDSogBM1n
— Virat Kohli (@imVkohli) August 27, 2020