ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு..!!

This year's Asian Cup cricket series has been postponed to 2023.

இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற  2023-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதனை தொடர்ந்துகொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருந்தஆசியகோப்பைகிரிக்கெட் தொடர் வருகின்ற  2023-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும், போட்டி அட்டவணையை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாலும், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.