நண்பர் ரஜினியை மட்டும் விட்டு விடுவேனா? ஆதரவு கேட்பேன் – கமல்ஹாசன்

With next year's assembly elections looming, Kamal Haasan has said he will seek the support of his friend Rajini in the polls.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ,தேர்தலில் நண்பர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நேற்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடைபெற்றது.ஆலோசனை நடைபெற்று முடிந்த பின் சென்னை போயாஸ் கார்டனில் உள்ள அவர் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில், நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அவர்களுடைய கருத்தை கூறினார்கள்.நான் என்னுடைய கருத்தை கூறினேன்.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன் என்று ரஜினி கூறினார்.

இதனிடையேநடிகர் ரஜினிகாந்த் நேற்று மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் ரஜினி குறித்து கூறுகையில்,பிரச்சாரம் செல்லும்பொழுது எல்லோர் வீட்டிற்கும் சென்று வாக்கு கேட்பேன். என் நண்பனான ரஜினி வீட்டை மட்டும் விட்டு விடுவேனா? அவரிடமும் தேர்தலில் ஆதரவு கேட்பேன். மேலும் ரஜினிக்கு அரசியலை விட ஆரோக்கியம் முக்கியம், அவர் நலமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.