அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார் என்று பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என ராகுல் ட்வீட்
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இன்று தீர்ப்பு
unknown nodeஇதனையடுத்து, அவருக்கு மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இந்த தண்டனையை எதிர்த்து அவர் சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கிற்கான தீர்ப்பை நீதிமன்றம், ஏப்ரல் 20ஆம் தேதி ஒத்தி வைத்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார்?
இந்த நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார் என்று பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். துறைமுகம், மின்சாரம், நிலக்கரி, சூரிய ஒளி, மின் திட்டம் போன்றவை அதானி வசம் சென்றது எப்படி? என கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
unknown node