ஆளுநர் அவர்களே வள்ளுவரும் வள்ளலாளரும் நீங்கள் விழுங்கவே முடியாத கலகக்குரல்கள் என சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு.
நேற்று, வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்தவன்; வள்ளலாரின் நூல்களை படித்தபோது மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது; பத்தாயிரம் வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என தெரிவித்திருந்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி சானதானம் குறித்து பேசியுள்ளது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் அப்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் மதித்த சமயதம் வழக்கெல்லாம் மாய்ந்தது, வர்ணாசிரமெனும் மயக்கமும் சாய்ந்தது” என்று சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என்கிறார்ஆளுநர் . ஆளுநர் அவர்களே வள்ளுவரும் வள்ளலாளரும் நீங்கள் விழுங்கவே முடியாத கலகக்குரல்கள். மட்டுமல்ல சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node