#BigBreaking: தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு..!

The curfew has been extended till June 14 in Tamil Nadu

தமிழகத்தில் வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன்-7ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா தொற்று அதிகமாக உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க முடிவு செய்துள்ளதாகவும், கொரோனா பரவல் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளை வழங்கவும் மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில்,தமிழகத்தில் வருகின்ற ஜூன் 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,காய்கறி,இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .

மேலும்,பழக்கடைகள், பூக்கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக்கல்,ஹார்டுவேர் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

unknown nodeunknown node