புதிய அரசு பேருந்தை ஒட்டி, தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!

Welfare Minister SS Sivasankar has started operating a new bus on the Anandawadi-Jayankondam route in Ariyalur district.

அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி-ஜெயங்கொண்டம் வழித்தடத்தில் பிட்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய பேருந்தை இயக்கி தொடங்கி வைத்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தவாடி ஜெயங்கொண்டம் வழித்தடத்தில் கூடுதலாக பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். அதன்படி ஆனந்தவாடி கிராமத்திலிருந்து இரும்புலிக்குறிச்சி உடையார் பாலம் வழித்தடத்தில் ஜெயங்கொண்டம் செல்லும் வகையில் இன்று முதல் கூடுதல் அரசு பேருந்து இயக்கப்படுகிறது.

இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். மேலும் அமைச்சர் சிவசங்கர் பேருந்தை சிறிது தூரம் ஓட்டி சென்று மக்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.