என்னுடைய செல்போன் உளவு பார்க்கப்பட்டது சட்டவிரோதமானது – திருமுருகன் காந்தி

என்னுடைய தொலைபேசியையும் உளவு பார்த்தது கண்டனத்திற்குரியது என திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

என்னுடைய தொலைபேசியையும் உளவு பார்த்தது கண்டனத்திற்குரியது என திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து, பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வில், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்பதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்தது  தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மெக்ஸிகோ, பஹ்ரைன், ஹங்கேரி, மொராக்கோ, ருவாண்டா, அஜர்பைஜான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தது என THE WIRE ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த பட்டியலில், இந்தியாவை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், 40-க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்களது எண்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி அவர்களின் செல்போனும் உளவு பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த குற்றசாட்டு தொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய அரசு, தற்போது எழுந்துள்ள குற்றசாட்டு அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய திருமுருகன் காந்தி அவர்கள், என்னுடைய தொலைபேசியையும் உளவு பார்த்தது கண்டனத்திற்குரியது. இது போன்ற நேர்மையற்ற செயல்களை உடனடியாக தடுக்க வேண்டும். ஒட்டுக்கேட்பு மனித உரிமை செயற்பட்டாளர்கள் மற்றும் ஊடகத்தை அச்சுறுத்தும் செயல். இது தொடர்ச்சியாக நடைபெறும் என்ற அச்சம் உள்ளதாகவும், பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

என்னுடைய செல்போன் உளவு பார்க்கப்பட்டது சட்டவிரோதமானது – திருமுருகன் காந்தி