அடுத்த நகர்வு என்ன ? நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை

As Rajinikanth is in consultation with district councilors today, his fans are in anticipation of what he will decide on politics.

மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் ,அரசியல் குறித்து அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கொரோனா சமயத்தில் மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி பொது நிகழ்வில் பங்கேற்காமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இன்று ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்திற்கு பட்டாசு வெடித்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். நிர்வாகிகளுடனான இந்த சந்திப்பில், நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்து கொண்டுள்ளதால் இந்த சந்திப்பில்,அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்பை வெளிட்ட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரஜினி ரசிகர்களில் ஒரு சிலர் அவர் அரசியல் நிலைப்பாட்டில் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் அந்த முடிவு என்னவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் உள்ளனர். மேலும் ஒரு சிலர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.