பிரதமரின் முத்ரா திட்டம்;அனுமதிக்கப்பட்ட 14.96 லட்சம் கோடி கடன்..!

Prime Minister's Mudra Scheme; Loans up to Rs 14.96 lakh crore have been sanctioned!

பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 14.96 லட்சம் கோடி வரையிலான கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டமானது பிரதமர் நரேந்திர மோடியால் ஏப்ரல் 8,2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 14.96 லட்சம் கோடி மதிப்புள்ள இத்திட்டத்திலிருந்து 28.68 கோடிக்கும் அதிகமான கடன்கள் வங்கிகள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன,மேலும் அனைத்து பங்குதாரர்களின் நிதித் தேவைகளும் , பல்வேறு முயற்சிகள் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன” என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து யூனியன் நிதி அமைச்சகமானது,”பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்,விவசாயிகள் மற்றும் மிகவும் நலிவடைந்த தொழில் முனைவோர் போன்றோர்களுக்கு உதவ நிதி அமைச்சகம் தயாராக உள்ளது”, என்று தெரிவித்துள்ளது.

எனவே PMMY திட்டத்தின் கீழ், கார்ப்பரேட் மற்றும் பண்ணை அல்லாத சிறு அல்லது குறு நிறுவனங்களுக்கு  10 லட்சம் வரையிலான கடன் தொகை வழங்கப்படுகின்றன.