புதிய குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை அதிபர்…!

Default Image

திரௌபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்